வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அரசாங்கத்தின் பிரதான கடமை…


பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதை அரசாங்கத்தின் பிரதான கடமையாக கருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் ,முதல் கட்டத்தில் ஐயாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்டது. எனினும் அவர்களில் மூவாயிரத்து 200 பேர் மாத்திரம் நியமனங்களை பொறுப்பேற்றதாக கூறினார்;.
சமகால அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டப்படவில்லை, வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே பட்டத்தைப் பெறுவதுடன்இ அதன் பின்னர் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர். வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது அது குறித்து திருப்தியடைவதில்லை. பட்டம் பெற்ற ஆண்டை அடிப்படையாகக் கொண்டே நாம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். 2018 மே 25ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து முதற்கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதத்தில் 5000 பேரை பயிற்சியில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்களில் 3200 பேர் வரையில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக வந்தனர். ஒக்டோபர் மாதத்தில் எமது வேலைவாய்ப்புகளில் மந்த நிலை ஏற்பட்டது.. பின்னர் எம்மமால் அதனை பெற்றுக்கொண்ட பின்னர் 16 000 பேருக்கு நியமன கடிதங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்கள் பட்டம் பெற்று வெளியேறிய வருடங்களை அடிப்படையாக கொண்டே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனு னெ;றும் பிரதமர் தெரிவித்தார்.
2016 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்களை பெற்றவர்களுக்கு நியமனங்களை வழங்கினோம். இதுவரையில் வரையில் வேலையில்லா பட்டதாரிகளில் 20, 000 பேர் வரையிலானவர்களுக்கு நாங்கள் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக வெளிவாரி பட்டதாரிகளில் 6000 பேருக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் முதலாவதாக அரச பல்கலைகழக பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கப்படும். வெளிவாரி பட்டதாரிகளில் சிலர் வேறு வேலைகளை செய்துகொண்டே வெளிவாரி பட்டதாரிகளாகின்றனர். இதன்பின்னர் இங்கு வேலை வாய்ப்புகளை எதிர்ப்பார்க்கின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.