அவனுக்கு எய்ட்ஸ் உள்ளது! வெளியூரில் உள்ள மனைவியை காண ஆசையாக சென்ற கணவருக்கு நேர்ந்தது?

வெளியூரில் உள்ள குடும்பத்தினரை சந்தித்து விட்டு சென்னைக்கு ரயிலில் வந்த நபர் சாப்பிட்ட உணவில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து தங்கசங்கிலியை பறித்த கொள்ளையனை, பொலிசார் கைது செய்தனர்.

சென்னை தெற்கு ரெயில்வேயில் பொறியாளராக இருப்பவர் அமீத்குமார். அயனாவரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வரும் இவர், கடந்த மாதம் 18ம் திகதி கொல்கத்தாவில் உள்ள தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து விட்டு அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை திரும்பியுள்ளார்.

ரெயில் ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே வந்தபோது, வீட்டில் இருந்து கொடுத்தனுப்பிய உணவை சாப்பிட தயாரானார்.

ரெயில் நிலையத்தில் இறங்கி நொறுக்குத் தீனி வாங்கிக் கொண்டு மீண்டும் ரெயிலில் ஏறியுள்ளார். சாப்பிட்ட சற்று நேரத்தில் ரெயிலின் இருக்கையில் மயங்கிக் கிடந்த அமீத்குமாரை, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மீட்ட ரெயில்வே பொலிசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இரு தினங்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அமீத்குமாரிடம் நடத்திய விசாரணையில், அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

ரெயில் பயணத்தின் போது, தான் சாப்பிட்ட பின்னர் மயங்கியதாகவும், தனது அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த மஞ்சள் டி-சர்ட் அணிந்திருந்த வட மாநில நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் மஞ்சள் டி சர்ட் அணிந்து சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் மூலம் காவல்துறையினர் அடையாளம் கண்டனர். ரெயில்வே டிக்கெட் கவுண்டரில் இருந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்ததால், அங்கு விசாரித்த போது அவர் கொல்கத்தா செல்ல முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்து சென்றதையும் கண்டறிந்தனர்.

செல்போன் நம்பர் மூலம் அதன் சிக்னலை வைத்து கொள்ளையனை கண்காணித்த காவல்துறையினர், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து அவனை சாமர்த்தியமாக சுற்றிவளைத்தனர்.

விசாரணையில் அவன் பிரபல மயக்க மாத்திரை கொள்ளையன் சுபுகான்கர் சங்பூர்த்தி என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று டிபன்பாக்சை வைத்து விட்டு நொறுக்குத் தீனி வாங்க ஏலூரு ரெயில் நிலையத்தில் அமீத்குமார் இறங்கியதும், டிபன் பாக்சில் இருந்த உணவில் லோரா சிப்பம் என்ற மயக்க மாத்திரையை பொடியாக்கி தூவியுள்ளான் கொள்ளையன் சுபுகான்கர்.

அவரும் உணவு சாப்பிட்ட அரைமணி நேரத்தில் மயங்கி விட, அருகில் அமர்ந்திருந்த கொள்ளையன் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றிக் கொண்டு இடம் மாறி அமர்ந்துள்ளான்.

இந்த மாத்திரையை சாப்பிடுபவர்களுக்கு 8 மணி நேரம் வரை கண் விழிக்க முடியாது என்பதால், துணிச்சலாக இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளான் என்கின்றனர் காவல்துறையினர்.

ரெயில்வே பொறியாளர் அமீத்குமாரிடம் கொள்ளையடித்த தங்கசங்கிலியை, கொள்ளையனிடம் இருந்து மீட்டனர். எய்ட்ஸ் நோயாளியான சுபுகான்கர் இதுவரை 10-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கொள்ளையன் சுபுகான்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.