யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்துள்ள பிரபல நடிகை!

பிரபல நடிகை சுகன்யா யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்து நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை நடாத்தியிருக்கின்றனர்.

1990களில் வெளியான திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக திகழ்ந்தவர் சுகன்யா அத்தோடு தொப்புளில் பம்பரம் விடும் காட்சியால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.

இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படும்.