பரபரப்பாகும் பிக் பாஸ்! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை நெருங்கவுள்ள நிலையில் நாளை யார் போட்டியில் இருந்து வெளியேறப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள் உள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமை ரேஷ்மா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த முறை எலிமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஓட்டிங்கில் லொஸ்லியாவிற்கு தான் அதிகப்படியான ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே சாக்க்ஷிக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்தது. அதுவும் இல்லாமல் பார்வையாளர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து வருபவரும் இவர்தான்.

இந்நிலையில் சாக்க்ஷி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

கடந்த வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் நாளை நிச்சயம் சாக்க்ஷி வெளியேறிவிடுவார் என்பது பார்வையாளர்களின் கருத்து கணிப்பாகவுள்ளது. எதுவாக இருந்தாலும் நாளை தெரிந்து விடும்.