மூட்டுவலி சிகிச்சைக்கு சென்ற 60 பெண்களை சீரழித்த மருத்துவன்.!

பெண்களுக்கு நடைபெறும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மருத்துவர்களாலும் அரங்கேறும் செய்தியானது பெரும் துயருக்கும்., மன சங்கத்திற்கும் நம்மை உள்ளாக்குகிறது. சிகிச்சை பெற வந்த பெண் நோயாளிகளை மருத்துவர் என்ற போர்வரையில் காம கொடூரன் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள கிழக்கு சுவிச்சர்லாந்து பகுதியில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் முடநீக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவர்) இயல்துறை மருத்துவனாக பணியாற்றிய மருத்துவன்., சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளான்.

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்த இவனின் செயல்பாடுகளை அறிந்த பெண்ணொருவர்., இது குறித்து இவனிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் விசாரணை செய்துள்ளார். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்., சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. பின்னர் அனைவரையும் ஒன்றுதிரட்டி புகார் அளிக்கவும் பேசியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 60 பெண்களில் 29 பெண்கள் இது குறித்து புகார் அளித்த நிலையில்., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக இவனிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை., உடலில் ஆடைகள் அனைத்தும் களையப்பட்டு., உள்ளாடைகள் மட்டும் அணிந்து சிகிச்சை செய்து வந்துள்ளான்.

இந்த நேரத்தில்., பெண்களின் இனப்பெருக்க உறுப்புக்கள் மற்றும் பாலுணர்ச்சிக்கான உறுப்புகளில் தவறான அணுகுமுறையிலும்., சில பெண்களிடம் சொல்ல முடியாத சில தீண்டத்தகாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளான். இதுமட்டுமல்லாது சில பெண்களிடம் தன்னுடைய ஆசைக்கு ஒத்துழைக்குமாறும்,, தன்னுடன் உல்லாசமாக இருக்க சம்மதமா? என்றும் கேட்டுள்ளான்.

சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இல்லாத சிலர் இவனின் தீண்டத்தகாத செயலின் நோக்கம் கூட அறியாமல்., பெண்களின் உணர்ச்சியை அதிகரித்து பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் 40 மாதங்கள் சிறை தண்டனையும்., மருத்துவராக பணி செய்ய வாழ்நாள் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.