இனவாத தாக்குதல் காரணமாக பதற்றம்! அதிரடி படையினர் குவிப்பு

நீர்கொழும்பு மீரிகம வீதியில் கட்டுவப்பிட்டிய அருகே வீதியோரம் உள்ள மாதா உருவச்சிலைக்கு கல்லெறிந்து இனந்தெரியாத சிலர் சேதம் விளைவித்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸாரும் அதிரடி படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதுவொரு இனவாத தாக்குதல் என தெரிவிக்கும் பிரதேச மக்கள் வன்முறைகள் எதுவும் வெடிக்கும் என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.