ஹெல்மெட் இல்லனா பெட்ரோல் இல்ல!!

ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு இனி எந்த பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் வழங்க முடியாது என பெங்களூர் பெட்ரோல் நிலையங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் உயிரிழப்பதற்கு முக்கிய காரணம் ஹெல்மட் அணியாதது முக்கிய தான் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஹெல்மட் விவகாரத்தில் பெங்களூர் நீதிமன்றங்களும் கடுமையான சட்டங்களை நிறைவேற்றி அதிரடி காட்டிவருகின்றன. இந்நிலையில், அந்த மாநில காவல்துறையினர் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பே திடீரென முன்னறிவிப்பின்றி பெட்ரோல் தர மறுத்ததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.