உனக்கு இரவு 2 மணிக்கு லொஸ்லியா கூட என்ன பேச்சு.. கோபப்பட்ட கவினை தர்ஷன் கேட்ட கேள்வி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு வாரங்களில் காதல் நாயகனாக வலம் வந்தார் கவின்.

கடந்த ஒரு வாரமாக சாக்‌ஷியுடன் காதலில் ஏற்பட்ட காதல் முறிவில் இருந்து சோகமாக காணப்பட்டு வருகிறார்.

வெளியான முதல் ப்ரோமோவில் சாக்‌ஷி என்னை காலி செய்கிறாள் என்று எனக்கு தெரியும், இனிமேல் நான் அவள் பக்கம் போகமாட்டேன் என்று கவின் கூறினார்.

இந்நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கவினை பார்த்து ரேஷ்மா காதல் முறிவு ஏற்பட்டதும், எப்படி இன்னோரு பெண்ணிடம் சகஜமாக பழகுவீர்கள் என்று கேட்டு சாக்‌ஷிக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.

அதன் பின்னர் சரவணன் கவினுக்கு சாதமாக கோபம் எல்லோருக்கும் வரும் ஏன் மிருகத்துக்கு கூட வரும் என்று பேசியுள்ளார்.

அதைத்தொடர்ந்து தர்ஷன் நைட்டு இரண்டு மணிக்கு என்ன லொஸ்லியாவிடம் பேச்சு வேண்டியிருக்கு என்று ஆதங்கப்பட்டுள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்று கவின் உடனான காதல் விவகாரம் முற்றியுள்ளது என்பது தெரிகிறது.