மைதானத்திற்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய குசல்,செஹான் ! நடந்ததென்ன ?

இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் மெண்டீஸ் மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் மைதானத்தினுள் மோட்டார் சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டத்தினால் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதனாத்தில் மூன்றாவது போட்டியின் பின்னர் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் தொடரின் நாயகன் மற்றும் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவானார்.

இதற்காக அவருக்கு மோட்டார் சைக்கிளொன்றும் வழங்கப்பட்டது. அந்த மோட்டார் சைக்கிளை இலங்கை அணியின் குசல் மெண்டீஸ் செலுத்த பின்னால், செஹான் ஜெயசூரிய அமர்ந்து பயணித்தார்.

ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளை குசல் மெண்டீஸ் திருப்ப முற்பட்டபோது எதிர்பாராத விதமாக சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானது.