வெட்டிய தலைகளை வைத்து கால்பந்து விளையாடும் கைதிகள்!

பிரேசில் சிறையில் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலில் 57 பேர் வரை கொல்லப்பட்ட செய்திகள் வெளியாகிய நிலையில், கொல்லப்பட்ட எதிர் கேங்கில் உள்ளவர்களின் தலைகளை வைத்து சில கைதிகள் கால்பந்தாட்டம் ஆடும் கொடூர வீடியோ ஒன்று வெளியாகி நெஞ்சை பதை பதைக்கச் செய்துள்ளது.

அந்த வீடியோவில், சிறை அறைகளுக்குள் இல்லாமல் சிறையின் மேல் பகுதியில் பல கைதிகள் கூடியிருப்பதைக் காண முடிகிறது.

அவர்கள் தாங்கள் வெட்டிய தலைகளை பந்துகளாக பயன்படுத்தி கால்பந்தாட்டம் ஆடுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

பிரேசிலின் Altamira Regional Recovery Center என்னும் சிறையில் நேற்று இரண்டு குழுவினருக்கிடையே வெடித்த மோதலுக்குப்பின் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

வீடியோவை காண

சிறையின் ஒரு பிளாக்கிலிருந்த கைதிகள் மற்றொரு பிளாக்குக்கு சென்று ஒரு அறைக்கு தீ வைத்துள்ளனர்.

நடந்த இந்த சிறைக்கலவரத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் 16 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

அந்த தலைகளை வைத்துத்தான் கைதிகள் கால் பந்தாட்டம் ஆடியுள்ளதாக கருதப்படுகிறது.

இரண்டு சிறைக்காவலர்கள் கைதிகளால் சிறை வைக்கப்பட்டாலும், பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

வெறும் 200 பேர் மட்டுமே தங்க வசதியுள்ள அந்த சிறையில், 311 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.