பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கிராமம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இந்த டாஸ்க் செய்யும்போது சாண்டி மற்றும் மதுமிதா இடையே பெரிய சண்டை வெடித்துள்ளது.
மதுமிதா குள்ளம் என சாண்டி முதலில் காலாய்த்தார். “குள்ள நாட்டாமை” என சாண்டி கூறியது மதுமிதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் வேறொரு டாஸ்கில் மதுமிதா தனக்கு உடல்நிலை சரியில்லை என சொன்னபிறகும் ‘மாரியம்மா.. மாரியம்மா’ பாடலுக்கு ஹெவியாக ஆடவேண்டும் என சாண்டி வற்புறுத்தினார். மேலும் மதுமிதாவின் முகத்தில் பேஸ்ட் தடவி விட்டனர்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மதுமிதா, சாண்டியை திட்டி தீர்த்துவிட்டார்.