புகையிரதத்துடன் மோதிய நபர் பலி!

கண்டி, வில்லியம் கோபல்லாவ மாவத்தையில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர், முருதகஹமுல பகுதியை சேர்ந்த, 59 வயதுடையவரென இணங்காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.