தனது முதல் கணவர் குறித்து கண்ணீர்விட்டு அழும் சீரியல் நடிகை பவானி!

சின்னதம்பி என்ற சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. இவர் தமிழை தாண்டி தெலுங்கில் அதிக சீரியல்கள் நடித்துள்ளார்.

இவரது கணவர் பிரதீப் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

அதன்பிறகு தனது வாழ்க்கையே போனது என்று இருந்த பவானி ரெட்டிக்கு அவரது பெற்றோர் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பவானி ரெட்டி பேசும்போது, முதல் கணவர் குறித்து கண்ணீர் விட்ட அவர் பின் அதைப்பற்றி பேச முடியவில்லை என கூறியுள்ளார்.

தனது பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த இரண்டாவது திருமணம் குறித்து தேதி இம்மாதம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.