அமெரிக்காவில் பாதி மனிதன், பாதி நாய் உருவம் கொண்ட மர்மமான உயிரினம் ஒன்று வீடியோவில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின், சான் பெனிட்டோ நகரத்தில் உள்ள நதியின் ஓரத்தில் குறித்த மர்ம உயிரினம் படமாக்கப்பட்டுள்ளது. குறித்த நதியில் இரண்டு நண்பர்கள் படகு ஓன்றில் வீடியோ எடுத்தபடி பயணித்துள்ளார்.
அப்போது, நதியின் ஓரத்தில் நான்கு காலில் உயிரினம் ஒன்று தண்ணீர் குடிப்பதை கண்டுள்ளனர். படகு வருவதை கண்ட உயிரினம் திடீரென மனிதன் போல் எழுந்து நின்றுள்ளது.
இதைக்கண்ட இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது நாயா? மனிதனா? என குழப்பமடைந்துள்ளனர். படகை கண்ட மர்ம உயிரினம் உடனே புல்வெளியில் சென்று மறைந்துக்கொள்கிறது.
குறித்த வீடியோவை, டிஸ்க்ளோஸ் ஸ்கிரீன் என்ற யூடியூப் சேனல், மனித உருவத்தில் நாய் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் ரூபன் என்பவர் இதை வீடியோவாக படமெடுத்தார் என குறிப்பிட்டுள்ளது.
வீடியோவை கண்ட சில நெட்டிசன்கள், நாய்மனிதன், கரடி, போலி வீடியோவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.