சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவாக டிடிவி தினகரன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வந்தார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த தங்கியிருந்தார்.

நேற்று காலை அவரது முன்னிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். அதன் பிறகு கர்நாடக மாநிலம் சென்ற அவர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துப் பேசினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, சசிகலாவை விரைவில் சிறையில் இருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியாக முயற்சி செய்து வருகிறோம். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம். உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கூறினார்.

அமமுகவில் உள்ள தொண்டர்கள் நிர்வாகிகள் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தாவி வரும் நிலையில், மற்ற கட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தது, அமமுக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.