பிக்பாஸில் நள்ளிரவில் தனியாக பேசிய கவின்- லொஸ்லியா!

பிக்பாஸில் தற்சமயம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் சாக்‌ஷி- கவின்- லொஸ்லியா என்ற முக்கோண காதல் தான்.

லொஸ்லியாவுக்கு கவினை பிடிக்கவில்லை. சாக்‌ஷிக்கு கவின் லொஸ்லியாவிடம் பேசுவது பிடிக்கவில்லை. கவினுக்கோ இவர்கள் இருவரை விடவும் மனமில்லை.

இதனால் இருவரிடமும் இன்று தனித்தனியாக பேசிய கவின், சாக்‌ஷியை அழைத்து பேசினார். அதற்கு சாக்‌ஷி, நீ எப்படி வேண்டுமானாலும் பழகி கொள். ஆனால் எனக்கும் போசசிவ்னஸ் இருக்கு என்று கூறினார்.

லொஸ்லியாவோ எளிதாக, நீ என்னிடம் பேச வேண்டாம். எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சித்து செய்து வருகிறேன். நீ என்னிடம் பேசாமல் இருந்தாலே இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறினார்.

கவினும் லொஸ்லியாவும் பேசியது நள்ளிரவில் தனியாக. இதை பார்த்த சாக்‌ஷி ஷெரினிடம், இந்த ராத்திரியிலும் அவளுடன் இவன் பேசிக்கொண்டிருக்கிறான், அது எப்படி நான், அவள் என்று ரெண்டு பேர். இவனால் எப்படி முடிகிறது என்று புலம்புகிறார்.