யாஷிகா ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார்.
“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கினார்.
தற்போது யாஷிகா ஆனந்த் “ஜாம்பி” என்ற படத்தில் யோகிபாபு உடன் நடித்து வருகின்றார். இந்த “ஜாம்பி” படத்திற்கு பின்னர் அத்துடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் யாஷிகா சேலையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார். என்ன தான் நவநாகரீக உடையில் இருந்தாலும், சேலையில் அதீத கவர்ச்சியுடன் இருப்பது போல தான் தோன்றுகிறது என்கின்றனர் யாஷிகாவின் ரசிகர்கள்.