மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை…

மரண தண்டனையை நிறைவேற்றுவது சம்பந்தமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

அவ்வாறு அறிவிக்கப்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை நிறைவேற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜே.டப்ளியூ. தென்னகோன் கூறியுள்ளார்.

நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியிருந்தார்.

எனினும் இது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை நிறைவேற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத் தயார் நிலையில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.