ஈழச் சிறுமியான சூப்பர் சிங்கர் சின்மயி உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும், தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கண்ணாண கண்ணே..” பாடலையும் பாடியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதேவேளை, அண்மையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஈழச் சிறுமியான சின்மயி வெற்றி பெற வில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தினை பிடித்திருந்தார்.
மேலும், ஈழத்தின் இளவரசியாய் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டார். கனேடிய மண்ணில் வளர்தாலும்கூட ஆங்கில உச்சரிப்பு சிறிதுமே கலக்காமல் தமிழை மிகத் தெளிவாக உச்சரித்துப் பாடக்கூடிய திறமை சின்மயியிடம் இருக்கின்றது.