இளைஞா் பேருந்தில் மோதி பலி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரிகின்ற குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் வீடு திரும்பி சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளா் தொிவித்துள்ளாா்

குறித்த விபத்தில் உயிரிழந்த இளைஞன், உடையார்கட்டு தேராவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரராசா பிரசாந்த் என தொியவந்துள்ளது.

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.