யாருமே எதிர்பார்க்காத ஒருவரை மத்திய அமைச்சராக்கிய மோடி?

மண் குடிசையில் வாழும் சந்யாசி பிரதாப் சந்திர சாரங்கி எம்.பி ஆனதோடு மத்திய அமைச்சராகவும் ஆன அதிசயம்!

பிரதாப் சந்திர சாரங்கி என்ற 64 வயது நபர் ஒரிசாவில் இருந்து தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பி, தற்போது மத்திய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பெரிய கட்சியில் சீட்டு வாங்க பல நூறு கோடி செலவு செய்வதாக கூறப்படும் நிலையில் மிக ஏழ்மையான ஒருவர் இந்திய அளவில் மிகப்பெரிய தேசிய கட்சியாக உள்ள பாஜகவின் சார்பாக எம்.பி ஆகி, மத்திய அமைச்சராகவும் ஆகி இருப்பது வியப்புக் குரிய விஷயம் தான்.

ஒடிசாவின் மோடி:

இவரின் எளிமையான வாழ்க்கையை பார்த்து அப்பகுதி மக்கள் இவரை ஒரிசாவின் மோடி என அழைக்கிறார்கள். காரணம் பிரதாப் சந்திர சாரங்கி வாழும் எளிய வாழ்க்கை தான். எங்கும் சென்றாலும் சைக்கிளில் தான் செல்வார்

நம் நாட்டில் கவுன்சிலராக இருப்பவர்கள் கூட கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ள நிலையில். சந்யாசி பிரதாப் சந்திர சாரங்கிக்கு இருக்கும் சொத்து மண் குடிசை வீடும் ஒரு சைக்கிளும் மட்டும் தான்.

சந்யாசி ஆக ஆசை:

இளம் வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி ராம கிருஷ்ணா மடத்தில் சந்யாசியாக சேர விருபியபோது, அவரை குறித்து விசாரித்த மடத்தை சேர்ந்தவர்கள், அவரது தாய் விதவை என அறிந்து, தாயாரை சென்று கவனிக்க சொல்லி விட்டனர்.

சேவைகள்:

இதையடுத்து தன்னை சுற்றியுள்ள பகுதிகளில் தன்னால் முடிந்த நல்ல விஷயங்களை செய்து வருகின்றார். பள்ளியை கட்டியுள்ளார்.

மண் சுவர் கொண்ட வீட்டில் இருந்து டெல்லிக்கு பதவி ஏற்க செல்லும் மத்திய அமைச்சர் இவர் தான். 2014ல் பாஜக சார்பாக போட்டியிட்டு தோற்றாலும், இந்த முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பல நூறு கோடி செலவு செய்தால் மட்டுமே சீட்டு என நிர்ணயம் செய்யும் பல கட்சிகளுக்கு மத்தியில் பாஜக பிரதாப் சந்திர சாரங்கிக்கு இடத்தை வழங்கி மத்திய அமைச்சர் ஆகவும் ஆக்கி உள்ளது.