இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளை நாம் தொடர்ந்து அறிந்து வரும் சூழலில்., கடுமையான அதிர்ச்சியை மட்டுமே நமக்கு தருகிறது. வீட்டில் தனியாக இருந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சார்ந்த பெண்மணியின் பெயர் விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில்., விமலா வேலூரில் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை என்பதால்., வீட்டில் தனியாக வசித்து வரும் லதா., கடந்த செவ்வாய்க்கிழமையன்று மதுவை அருந்திவிட்டு வீட்டின் கதவை அடைக்காமலேயே உறங்கியுள்ளார்.
இந்த சமயத்தில்., நள்ளிரவு நேரத்தில் இதனை கவனித்த திருடன்., அவரது வீட்டிற்குள் சென்று பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து., அவரை பலாத்காரம் செய்துள்ளான். போதையில் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில்., எழுந்தவுடன் தனது ஆடைகள் அனைத்தும் களையப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து சுதாரித்த அவர்., தாம் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதை அறிந்து அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு., கொடூரனை கைது செய்தனர்.
காமக்கொடூரனை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நோட்டமிட்டு., அந்த வீட்டில் திருட முயற்சித்துள்ள நிலையில்., சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று அனைத்து நகை மற்றும் பணத்தை திருடிய நிலையில்., விமலா போதையில் உறங்கியதை கண்டுள்ளான்.
இதனையடுத்து பணம் மற்றும் நகைகளை திருடி கொண்டு பின்னர் அவரை பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.