யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்.கரணவாய் பகுதியில் நேற்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி நகரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியினர் பெண்ணை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், இந்த உயிரிழப்பு கடும் வெப்பத்தினால் நிகழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அண்ணாசிலையடி, கரணவாயைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 28 வயதுடைய ஜெரோசன் தயாளினி எனும் இளம் குடும்பப் பெண் என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.