கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தெரசா மே- இன் Brexit திட்டத்திற்கு எதிரான ஒரு பின்னடைவின் மத்தியில், ஹவுஸ் ஆப் காமன் தலைவர் ஆண்ட்ரியா லட்ஸம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Brexit விவகாரமானது தற்போது பரபரப்பான சூழ்நிலையை எட்டியிருக்கும் நிலையில், பிரித்தானியா அமைச்சர் ஆண்ட்ரியா லட்ஸம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் அனுப்பியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான தெரசா மே- இன் Brexit திட்டம் மீது தான் நம்பிக்கை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
It is with great regret and a heavy heart that I have decided to resign from the Government. pic.twitter.com/f2SOXkaqmH
— Andrea Leadsom MP (@andrealeadsom) May 22, 2019
முன்னதாக பிரதமர் தெரசா மே – இன் கீழ் 35 அமைச்சர்கள் பதிவியை ராஜினாமா செய்திருப்பதும், அதில் Brexit விவகாரம் தொடர்பாக 21 பேர் ராஜினாமா செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.