சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், கமலின் இந்து தீவிரவாதி குறித்த பேச்சுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாக, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக இருப்பதாக கூறினார்.
மேலும், குறிப்பாக மேல்விஷாரம் போன்ற பகுதியில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தால் இந்துக்கள் தனி பஞ்சாயத்து கேட்டு போராடுவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய விழைந்துள்ளனர்.
இதனையடுத்து, எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், உரிய காரணமா இல்லாமல் இந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீசார் மறுத்ததுள்ளனர்.
எனவே, புகாரளிக்கவந்தவர்களுக்கும், காவல் துறையினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், காவல் துணைக்கண்காணிப்பாளர் உடனடியாக நேரில் வந்து இருதரப்பினரும் சமரசம் செய்து வைத்துள்ளார்.