இந்தியாவின் அடுத்த அரசை தேர்வு செய்யும் மக்களவை பொதுத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் இன்று மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக, இந்தியாவில் உள்ள மொத்தம் 543 தொகுதிகளில் தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி மட்டும் இல்லாமல் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆனது வருகின்ற மே 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 22 சட்டமன்றத் தொகுதிகளில் இடை தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலுக்கான தேர்தல் முடிந்த பிறகு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
C வோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்திய அளவிலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் :
பாஜக கூட்டணி : 287
காங்கிரஸ் கூட்டணி : 128
மூன்றாவது அணி ( BSP + SP ) : 40
இதர அணி : 87
c வோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.