பெண் ஊழியருக்கு முத்தம்.! களேபரமான விமான நிலையம்!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நேற்று துபாய் செல்லும் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது .இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்ய கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முகமது செரீப் என்ற 36 வயது நபர் கவுண்டரில் போர்டிங் பாஸ் வாங்க நின்றுள்ளார். அப்பொழுது அந்த கவுண்டரில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் அவரது போர்டிங் பாஸை கொடுத்துள்ளார்.

அப்பொழுது முகமது செரீப் அந்த பெண் ஊழியரின் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்த பெண் ஊழியர் கூச்சலிட்டு கதறியுள்ளார். இந்நிலையில் அங்கு விரைந்த விமான நிலைய அதிகாரிகள் முகமது செரீப்பை பிடித்து விசாரித்துள்ளனர்.

ஆனால் அவர் நான் எந்த தவறும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த நிலையில் அவர் பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் முகமது செரீப்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.