மஹிந்தவின் கோட்டையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!!

அம்பாந்தோட்டை மாவட்டம் லுணுகம்வெஹர பெரலிஹல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக லுணுகம்வெஹர பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்த விசாரணைகளை தாம் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.