திடீர் பரபரப்பு – நம் நாட்டின் ஒரு பகுதியை முதன்முறையாக சொந்தம் கொண்டாடிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்!

ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் நடைபெற்ற கொடூரமான தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அதில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றதும், அவர்களுக்கும் இங்குள்ள சில அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு முதன் முறையாக இந்தியாவில் உள்ள ஒரு பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்தான். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கருத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency வில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது.

அதில், Wilayah of Hind என்ற பகுதியை தங்களுடைய தங்களுடைய புதிய மாகாணமாக ஐஎஸ் அறிவித்திருந்தது.

சோபியானில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் இஷ்ஃபக் அகமது சோபி என்பவர் கொல்லப்பட்டதாகவும் ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.