சருமம் வறண்டு விட்டதா? நுங்கை இப்படி யூஸ் பண்ணுங்க..

பொதுவாக பெண்கள் கோடைக்காலங்களில் வெளியிலே செல்ல பயப்படுவார்கள். ஏனெனில் வெயில் சரும அழகினையே கெடுத்து விடுகின்றது.

கோடையில் வெளியில் செல்வதனால் சருமம் வறண்டு போய் கழையிழந்து காணப்படும்.

இதனை தடுக்க நம்மில் சிலர் அன்றாடம் பியூட்டி பாலர்களுக்கு செல்வதே வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பணமும், நேரமும் தான் செலவாகுகின்றது.

அந்தவகையில் கோடையில் சருமத்தை பாதுகாக்க நுங்கு பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது நுங்கினை கொண்டு சரும பொலிவை எப்படி அதிகரிப்பது என்பதை பார்ப்போம்.

  • நுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.
  • ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.
  • தேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.
  • 2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.
  • நுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் அழகு பெறும்.