கல்முனையில் பொலிஸார் வித்தியாசமான தண்டனை

கல்முனையில் ஊரடங்கு நேரத்தில் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களுக்கு பொலிஸாரால் வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இவர்களின் மோட்டார் சைக்கிள் திறப்புகளை வேறாக்கி பறித்து எடுத்து தூர வீசி எறிந் துள்ளனர்.

இதனால் இவர்கள் வேறு வழி இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை கஷ்டப்பட்டு உருட்டி கொண்டு வீடுகளுக்கு திரும்பி வர நேர்ந்தது என்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.