யாழ் நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கார்!

பொதிகளுடன் கார் அநாதரவாக விடப்பட்டிருந்ததால் யாழ் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காகில்ஸ் பூட்சிற்க்கு அருகாமையில் பொதிகளுடன் வாகனமொன்று நிறுத்தப்பட்டுள்ளது

இதனை அவதானித்த அங்கு நின்றுருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்

இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதன் பின்னர் குறித்த வாகனத்தின் உரிமையாளர் வருகைதந்த நிலையில் வாகனம் சோதிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து வாகன உரிமையாளர் விடுவிக்கப்பட்டு வாகனமும் எடுத்துச் செல்லப்பட்டது.