பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் ஹசார்கஞ்சி எனும் பகுதி உள்ளது. இங்கு ஹசாரா இனமக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு கூடியிருந்த மக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த பல கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வெடித்து சிதறியது.
இச்சம்பவத்தில் அங்கிருந்த 16 பேர் உடல்சிதறி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து ராணுவத்தினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.