முன்னாள் காதலனுடன் சேர்ந்து வாழ விரும்பியதால்! கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்.!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டியை அடுத்துள்ள பகுதியை சார்ந்தவர் மணி., இவரது மகனின் பெயர் வெங்கடேசன் (வயது 23). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள காணாபத்தியை சார்ந்தவர் முனுசாமி. இவரது மகளின் பெயர் முனியம்மாள் (வயது 20).

இவர்கள் இருவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாக பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில்., கடந்த மார்ச் 26 ம் தேதியன்று தனது மனைவியை வெங்கடேசன் அவரது தாயாரின் இல்லத்திற்கு அழைத்து சென்று பின்னர் இரவு கிளம்பி தங்களின் இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில்., அங்குல ஒப்பன்ன கவுண்ட மயானத்திற்கு அருகில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இந்த தகவலானது காவல் துறையினருக்கு தெரிய வரவே., தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., வஃந்தில் வரும் பொது விபத்து ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில்., தனது சகோதரரின் இறப்பில் மர்மம் இருப்பதாக வெங்கடேசனின் தங்கை தெரிவித்ததை அடுத்து., முனியம்மாளிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காவல் துறையினரின் தீவிர கிடுக்குபிடி விசாரணைக்கு பின்னர்., திருமணத்திற்கு முன்னதாக அதே பகுதியை சார்ந்த ஓட்டல் தொழிலாளி விஜய் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வந்துள்ளது. கணவரான வெங்கடேஷை கொலை செய்து முன்னாள் காதலனுடன் வாழ முடிவு செய்துள்ளார்.

இவர்களின் திட்டப்படி இருசக்கர வாகனத்தில் வருவதை தெரிவித்து., இன்னார் சம்பவ இடத்திற்கு வந்ததும் கள்ளக்காதலன் இரும்பு பைப்பால் வெங்கடேஷை அடித்து கொலை செய்து தப்பியோடியுள்ளார். பின்னர் கணவர் விபத்தில் இருந்தது போன்று காவல் துறையினர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இந்த தகவலானது வெளிவந்துள்ளது. முனிமயம்மாள் மற்றும் கள்ளக்காதலன் விஜயை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைந்தனர்.