தோனி என் மீது கோவம் கொண்டார்.! தீபக் சாஹர்

பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை அணியின் ஆட்டத்தில் தொடர்ந்து இரண்டு பந்துகளை நோ பந்துகளாக வீசிய பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மீது மைதானத்திலேயே தனது கோபத்தை தோனி காண்பித்து, சில அறிவுரைகளை வழங்கியது குறித்து பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வெற்றிக்கு கடைசி கட்டத்தில் 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வீசினார்.

இதில் முதல் இரண்டு பந்துகளும் நோ பால்களாக வீசியதால் கூல் கேப்டன் தோனி பொறுமையை இழந்து, சாஹருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சாஹர் துல்லியமாக பந்துவீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தி காட்டினார்.

தோனி கோபமடைந்து குறித்து பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் பெரிய தவறு செய்து இருந்தேன். தோனி என் மீது மிகவும் கோபமாக இருந்தார். என்னை நிதானாமாக பந்துவீசி சொல்லி, சில ஆலோசனைகளையும் கொடுத்தார். பின்னர், ஆட்டம் முடிந்து தோனி சிரித்துக் கொண்டே என்னை கட்டி அனைத்து வெல் டன் என்று பாராட்டினார்” என்று அந்த ஆங்கில ஊடகத்திற்கு தீபக் சாஹர் பேட்டியளித்துள்ளார்.