மனைவியை தொண்டையில் குத்தி கொடூர கொலை செய்த கணவன்.!

சென்னையில் உள்ள பகுதியில் ஜோசியத்தொழிலும்., ஆட்டோ ஓட்டுநராவும் பணியாற்றி வருபவர் மகாராஜன் (வயது 25). அதே பகுதியை சார்ந்தவர் நித்யலட்சுமி என்ற கருத்தம்மா (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில்., கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து., இருவருக்கும் கார்த்திக் என்ற நான்கு வயதுடைய குழந்தை உள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் முடிந்த நாட்களில் இருந்து குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில்., இவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக அண்ணாநகர் பகுதிக்கு வீடெடுத்து வாடகைக்கு வந்துள்ளனர்.

புதிய இல்லத்திற்கு சென்றும் இவர்களுள் தகராறு ஏற்பட்டதை அடுத்து., வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த நித்யலட்சுமி., தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இதுமட்டுமல்லாது கணவரின் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த வாக்குவாதமானது முற்றவே., தனது மாமியாரின் இல்லத்திற்கு வந்த மகாராஜன் கத்தியால் தனது மனைவியின் தொண்டை பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் அலறிய அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து வந்த அக்கம் பக்கத்தினர்., உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நித்யலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., மகாராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியது.