பாலைவனத்தில் சிக்கி அழுதுகொண்டிருந்த சிறுவன்… தாயை பார்த்து கூறிய வார்த்தை!

அர்ஜென்டினா பாலைவனத்தில் சிக்கித்தவித்த 5 வயது சிறுவன் 24 மணிநேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

அர்ஜென்டினாவை சேர்ந்த பெஞ்சமின் சான்செஸ் என்கிற 5 வயது சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தன்னுடைய குடும்பத்துடன் சான் ஜுவான் பகுதியில் உள்ள பாலைவனத்திற்கு சென்றுள்ளான்.

அங்கு திடீரென சிறுவன் மாயமானதை அடுத்து, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் அறிந்து உடனடியாக 1000 பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் களமிறங்கினர்.

மேலும், இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து, தன்னார்வாளர்களும் உதவிக்கு முன்வந்தனர்.

ஒரு வழியாக 24 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், காணாமல் போன இடத்திலிருந்து 13 மைல்கள் தூரத்தில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

அப்போது அந்த சிறுவன் தன்னுடைய அம்மாவை பார்த்து, அம்மா நான் உங்களை மிகவும் இழந்தேன் என கூறியுள்ளான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது சிறுவன் நல்ல உடல்நலனுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிறுவனின் சகோதரி குவாடலூப் சுரிதா கூறுகையில், அவன் ஏற்கனவே சாப்பிட்டிருந்தான். காப்பாற்றப்பட்டதும் அவன் எங்களை பார்த்து சிரித்து பேசினான்.

இதனை எங்களால் நம்பவே முடியவில்லை. எங்கள் வாழ்க்கையில் செலவிட்டதிலே இந்த 24 மணி நேரம் தான் மோசமானது என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த சம்பவத்தின் போது உடனிருந்த ஒருவர் கூறுகையில், நாங்கள் பாலைவனத்தில் தேடிக்கொண்டிருந்த போது சிறுவனின் அம்மா பெயர் கூறி அழைத்தார். அதற்கு அந்த சிறுவன் அழும் சத்தம் மட்டுமே எங்களுக்கு பதிலாக கிடைத்தது. ஆனால் எங்கு இருக்கிறான் என்பதை கண்டறிய முடியவில்லை என கூறியுள்ளார்.