மாணவியை பரிசோதித்த போது மருத்துவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

இந்தியாவில் பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு பரிசோதனை செய்த போது ஒரு மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஒரு மாணவியின் உடல்நிலை மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவருக்கு தனியாக சில பரிசோதனைகள் மேற்கொண்ட போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் அம்மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்ட போது மாணவியின் 17 வயது சகோதரர் தான் இதற்கு காரணம் என தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.