ஆலயத்தில் தீக்குளித்த நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

கதிர்காமம் முருகன் கோயிலுக்கு அருகில் இருக்கும் விஷ்ணு கோயில் வளாகத்திற்குள் இன்று தீக்குளித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான நபரை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.