பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை தருகின்றது என்று சொல்லப்படுகின்றது.
அத்துடன் பீட்ரூட்டுடன் எலுமிச்சை, இஞ்சி, க்ரீன் ஆப்பிள் மற்றும் கேரட்டை சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் இரத்த அழுத்தம் குறைவதோடு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது இந்த அற்புத ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை
- பீட்ரூட் – 2
- க்ரீன் ஆப்பிள் – 1
- கேரட் – 1
- எலுமிச்சை – 1/2
- துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை சற்றும் தாமதிக்காமல் தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இந்த ஜூஸை எப்போது வேண்டுமானாலும் தயாரித்துக் குடிக்கலாம்.
இந்த ஜூஸைக் குடித்தால், உடனடியாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
அதே சமயம் இந்த ஜூஸை குடிக்க ஆரம்பிக்கும் போது சில நாட்கள் தலைவலி அல்லது குமட்டலை உணரக்கூடும்.
இதற்கு இந்த ஜூஸ் முதலில் உடலை சுத்தம் செய்வது தான் காரணம். நாளடைவில் அப்பிரச்சனை நீங்கி, உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.