காலை வாரிய கமலஹாசன்! கடுப்பான உடன்பிறப்புகள்!

பிரபல நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி இன்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல் இன்று காலை கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார்.

கட்சியின் முதலாமாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பிற்பகல் நாகப்பட்டினம் மாவட்டம் சென்ற கமல்ஹாசன், வேதாரண்யம் பகுதியில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்கினார்.

அதன்பின்னர் மாலை 6.30 அளவில் திருவாரூரில் பொதுக் கூட்டத்தில் (தெற்கு வீதி, திருவாரூர்) மக்கள் முன் உரையாற்றினார். அங்கு அவர் பேசுகையில், திருவாரூரில் வாரிசு அரசியலுக்கும் குடும்ப அரசியலுக்கும் முடிவு கட்டுவோம் என பேசினார். மேலும் வாரிசு அரசியல் தொடங்கியதும் திருவாரூரில் தான் என திமுகவை வம்புக்கு இழுத்துள்ளார். ஆனால் அதுவும் உண்மை தானே.

மேலும் துரோகத்தின் சின்னம் பல உள்ளது, நாங்கள் “நேர்மையின் சின்னம்” என்றும், மேலிடத்தில் ரைய்ட் விடப்போறாங்க. விட்டுப்பாருங்கள்! தெரியும், “நேர்மை” என்றால் என்னவென்று, இதுவரை யாரும் செய்யத்தயங்கியதை செய்யத்தவறியதை செய்து முடிப்போம் என்கின்ற நம்பிக்கையுடனும் உறுதியிடனும் நாங்கள் வந்திருக்கின்றோம், வாக்களிப்பதற்கு பணம் வாங்கமாட்டோம் என்கின்ற தன்மானத்துடன் வருகின்ற தேர்தலை நாம் அனைவரும் சந்திப்போம். நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது என கமல்ஹாசன் பேசியுள்ளார்.