இன்று பால் கோவா கொழுக்கட்டை பற்றி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு – ஒரு கப்,
தண்ணீர் – ஒன்றே கால் கப்,
உப்பு – சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
இனிப்பு கோவா – ஒரு கப்,
உடைத்த பாதாம், முந்திரி – தலா 3 டீஸ்பூன்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும்.
ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும்.
இதுவே மேல் மாவு.
பூரணம் :
ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சுவையான பால் கோவா கொழுக்கட்டை ரெடி.







