இளைஞர் மர்ம மரணம் – மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்.!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளஆலவயல் கல்லம்பட்டியை சேர்ந்தராஜா என்கிற ராஜேந்திரன் பொன்னமராவதியில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

தன்னுடன் உடன் பணிபுரிந்த நவநீதம்என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னால் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ராஜாவின் பெற்றோர் இவர்களது திருமணத்தை அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில் கல்லம்பட்டிக்கு சென்ற ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

தனது கணவர் ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவிநவநீதம் செவ்வாய் காலை பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது”சம்பவம் நடந்த இரவு தனது கணவர் ராஜா என்னிடமும் எனது மகனிடமும் நன்றாக பேசினார்.

அன்று இரவே எனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ராஜாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எனக்கு கூடதெரிவிக்காமல் எனது கணவரின் சடலத்தை உடனடியாக எரித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார். பொன்னமராவதி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.