ஆண் நண்பருடன் சென்ற பெண்ணுக்கு 10 பேர் கொண்ட குழுவால் கொடுமை..!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் இந்தியாவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகள் பயப்படுவதாகத் தெரியவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்த வேளையில் காரிலிருத்து வெளியே இழுக்கப்பட்டு 10 பேர்கொண்ட ஓர் குழுவால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காரில் தன் ஆண் நண்பருடன் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரையே 3 மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து சென்ற சிலர் கல்வீசி காரை நிறுத்திய பின்னர் காரிலிருந்து பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர்.

பெண்ணுடன் கூடச் சென்ற ஆண் நன்பர் கட்டி வைக்கப்பட்ட பின்னரே பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.