சுற்றி வளைக்கப்படும் திமுக எம்.எல்.ஏ – எடுத்த அடுத்தடுத்த முடிவு..?

அழையா விருந்தாளியாக பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, அவமானப்படுத்தப்பட்டது மட்டுமின்றி வழக்கை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் திமுக எம்.எல்.ஏ.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேி விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியானது.

இதனை அறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தொகுதி திமுக எம்எல் ஏ மெய்யநாதன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் மாணவ மாணிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அவருக்கு அழைப்பு விடுக்கப்படாமலேயே அங்கு சென்றது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இதனை தொடர்ந்து பல பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ,

திமுகவை சேர்ந்த எதிர்கட்சி எம்எல்ஏ சைக்கிள் கொடுப்பதால் தான் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி அதிகாரி தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க பணம் வாங்குவதாக கூறியதோடு, இது தொடர்பாக சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவதாக கூறினார்.

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி வனஜா கீரமங்கலம் காவல் நிலையத்தில் திமுக எம்.எல்.ஏ மீது புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ மெய்யநாதன் மீது கீரமங்கலம் போலிசார் பணி செய்யவிடாமல் தடுத்து, அனுமதி இன்றி அரசு சைக்கிள்களை எடுத்து வழங்கியது மற்றும் கல்வி அதிகாரி மீது அவதூறாக பேட்டி அளித்தது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.