அரைகுறை ஆடையுடன் ஓட்டம் பிடித்த இளம்ஜோடிகள்!!

தனியார் விடுதி ஒன்றில் எதிர்பாராத விதமாக திடீர் ரெய்டு போலீசாரால் நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து பல்வேறு ஜோடிகள் அரைகுறையான ஆடைகளுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி அருகே தனியார் விடுதிகள் பல உள்ளன. சில விடுதிகள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அடர்ந்த மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அங்குள்ள விடுதி ஒன்றில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர்.

இளம்ஜோடிகளுக்கு வசதியாக இருந்த அந்த விடுதி ரப்பர் தோட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. முன்னறிவிப்பின்றி விடுதிக்குள் நுழையும் போலீசாரை கண்டா ஜோடிகள் அரைகுறை ஆடைகளுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் ஒரு அறையினுள் போலீசார் நுழைகையில் அங்கு இளம்பெண் ஒருவருடன் இருந்த ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.