குழந்தைகளைக் கொலை செய்த தாய் , பெரும் பரபரப்பு

தனது இரு குழந்தைகளையும் கொலை செய்த இளம் தாய் ஒருவரைப் பற்றிய செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அமாந்தா ஹாக்கின்ஸ் என்ற 19 வயதான தாய், திடீரென தனது இரு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

மயக்க நிலையில் இருந்த குழந்தைகளைப் பார்த்த மருத்துவர்கள், இது பற்றி அமாந்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து அமாந்தா, தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஏரியில் இருந்த செடியொன்றை நுகர்ந்தமையினால் இவ்விருவரும் மயக்கமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அமாந்தாவின் கருத்து நம்பத் தகுந்தவாறு இல்லாத நிலையில், மருத்துவர்கள் காவல்துறையினரை அழைத்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், அமாந்தாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் அமாந்தா மருத்துவர்களிடம் கூறிய பதிலையே கூறினார். எனினும் காவல்துறையினரின் தீவிர விசாரணையின் போது, அமாந்தா அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.

தனது இரு குழந்தைகளுடன் இரவு விடுதிக்கு சென்ற போது, இருவரும் அழுதபடியே இருந்ததாக அமாந்தா தெரிவித்துள்ளார்.

தான் எவ்வளவு எச்சரித்தும் குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியாததால், குழந்தைகளை காரில் அமர்த்திவிட்டு, இரவு முழுவதும் மது அருந்தியதாக அமாந்தா கூறினார்.

அத்துடன் அடுத்த நாள் மயக்கம் தெளிந்ததும், குழந்தைகளை பார்க்கச் சென்ற போது, அவர்கள் இருவரும் மயக்கமுற்றிருந்ததாக அமாந்தா கூறியுள்ளார்.

இதனை அடுத்து மருத்துவர்கள் குழந்தைங்களை பரிசோதித்த போது, இரு குழந்தைகளும் மூச்சுத்திணறி, மரணமடைந்தமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்த அமாந்தா கைது செய்யப்பட்டதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.