ரஷ்ய அருகே நடுக்கடலில் இரு கப்பல்கள் விபத்தில் சிக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அருகே Kerch Strait பகுதியில் குறித்த கோர விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு கப்பல் வெடித்துச் சிதறியதாகவும் இன்னொரு கப்பல் தீ விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவப்பகுதியில் இருந்து கரும்புகை எழுவதாகவும் அது விபத்தின் தாக்கத்தை குறிப்பிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் இருந்து சுமார் 3 டசின் மாலுமிகள் கடுமையாக போராடி உயிர் தப்பியதாகவும், இதுவரை 12 மாலுமிகளை கடலில் இருந்து மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய இரு கப்பல்களிலும் துருக்கி மற்றும் இந்திய மாலுமிகளே இருந்துள்ளதாகவும் அவசர உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விபத்துக்குள்ளான கப்பலில் 16 துருக்கியர்கள் பணியாற்றியதாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதிக்கு 8 முதல் 10 கப்பல்கள் மீட்பு நடவடிக்கைக்காக விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான இரு கப்பல்களும் தன்சானியா நாட்டு கொடியுடன் சென்றதாகவும், இதில் ஒரு கப்பல் சமையல் எரிவாயு எடுத்துச் சென்றதாகவும், இன்னொரு கப்பல் பெட்ரோலிய பொருட்களையும் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கப்பலில் இருந்து அடுத்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்பிய நிலையிலேயே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.