இன்று சுவையான இறால் முட்டை சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
* இறால் – 300 கிராம்
* முட்டை – 3
* வடித்த சாதம் – ஒரு கப்
* பச்சை மிளகாய் – 3
* பெரிய வெங்காயம் – 2
* கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
* மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
* இஞ்சிபூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
* எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிதளவு
* உப்பு – தேவையான அளவு
* கொத்தமல்லி இலை – தேவையான அளவு
செய்முறை:
* இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
* உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.
* பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.
* இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.
* கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
* தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.