கள்ள மண் ஏற்றிய ட்ராக்டர் மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்!

தென்மராட்சி- கொடி­கா­மம், கெற்­பே­லிப் பகு­தி­யில் மண் கடத்­தி­ய­வர்­கள் பொலிசார் மீது நேற்று முன்தினம் இரவு உழவு இயந்­தி­ரத்தை மோதிவிட்டுத் தப்­பிச் சென்­ற­னர். இந்தச் சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளார். சம்­ப­வத்­தில் மேலும் 3 பொலிசார் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­னர்.

கெற்­பே­லி­யில் மண் கடத்­தப்­ப­டு­கின்­றது என்று கொடி­கா­மம் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் கிடைத்­துள்­ளது. அதை­ய­டுத்­துப் பொலி­ஸார் 4 பேர் மோட்­டார் சைக்­கிள்­க­ளில் அந்­தப் பகு­திச் சென்­றுள்­ள­னர். வீதி­யோ­ரம் சோதனை மேற்­கொண்­டி­ருந்­த­போது, உழவு இயந்­தி­ரம் ஒன்றை மறிக்க சப் இன்ஸ்பெக்டர் வீதிக்கு வந்­துள்­ளார். உழவு இயந்­தி­ரத்­தைச் செலுத்தி வந்­த­வர்­கள் அவர் மீது மோதித் தள்­ளித் தப்­பிச்­சென்­ற­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது. உழவு இயந்­தி­ரம் சப் இன்ஸ்பெக்டர் மீது ஏறிச் சென்­றது என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதன்­போது ஏனைய 3 பொலிசாரும் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ள­னர்.

உழவு இயந்­தி­ரம் ஏறி­ய­வர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு, மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்டு, அதி தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். ஏனைய 3 பேரும் விடு­தி­யில் சேர்க்­கப்­பட்­டுச் சிகிச்சை பெறு­கின்­ற­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தீவிர விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சந்­தே­க­ந­பர்­க­ளைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.